‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தெலுங்கு மாநிலங்களில் புதிய அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி. இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பவன் கல்யாண். இன்று சென்னைக்கு வந்துள்ள பவன் கல்யாண் சற்று முன்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பலர் கேட்ட கேள்விகளுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மாறி மாறி மூன்று மொழிகளிலும் பதிலளித்தார். இந்திய அரசியலில் தென்னிந்திய மாநிலங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றார். தற்போதுள்ள பல அரசியல் தலைவர்கள் அதற்கான வழி வகைகளைச் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஒய்எஸ்ஆர் கட்சியின் ஜெகன் ரெட்டி கூட அதைச் செய்யவில்லை. அவர் ஏதாவது முன்னெடுத்துப் பேசுகிறார். உடனே, அவர் மீதான வழக்கைப் பற்றி ஆளும் அரசுகள் எடுத்தால் அவர் உடனே அமைதியாகிவிடுகிறார் என்றார்.
2019ம் ஆண்டு தேர்தலில் உங்களது லட்சியம் என்ன என்ற கேள்விக்கு ஆந்திரப் பிரதேச முதல்வராவதுதான் என்னுடைய லட்சியம். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறேன் என்றார்.
2019ம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பவன் கல்யாணின் வரவு, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.