இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து உதயா, ஆர்.கே.சுரேஷ் இருவரும் விலகியுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஆதரவாளர்களான இவர்கள் இருவரும் திடீரென பதவி விலகியது திரையுலக வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' படம் தீபாவளிக்கும், உதயா நடித்த 'உத்தரவு மகாராஜா' படம் கடந்த வாரமும் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லாததால் படங்கள் குறிப்பிட்ட வசூலைக் கூட பெற முடியவில்லை. இருப்பினும் இருவருமே அவர்களது படங்களின் வெளியீட்டுப் பிரச்சினைக்கு தயாரிப்பாளர் சங்கம், அதிகமான தியேட்டர்களைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரித்ததில், அவர்கள் இருவருமே அவர்களது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாகச் சொல்கிறார்கள். தியேட்டர்களைப் பெற்றுத் தருவது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை அல்ல, இருப்பினும் சங்கத்தின் சார்பாக தியேட்டர்காரர்களிடம் பேசி நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இருவருக்குமே வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் நிதிப் பிரச்சினையில் தவித்த உதயாவிற்கு ஒன்றரை கோடி ரூபாய் வரையில் பேச்சு வார்த்தை மூலம் சரி செய்ய உதவியிருக்கிறார்கள்.
ஆனால், அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தைக் குறை கூறுகிறார்கள் என்கிறார்கள். 'திமிரு புடிச்சவன்' படம் தயாரிப்பாளர் சங்க அனுமதி பெறாமல்தான் வெளியாகியிருக்கிறது. அந்த தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பேசப்பட்டு வருகிறது என்றும் சங்கத் தரப்பில் சொல்கிறார்கள். அந்தப் படத்தால்தான் உதயா அவருடைய 'உத்தரவு மகாராஜா' படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார். ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' படம் 'சர்கார்' போட்டியில் சிக்கிக் கொண்டது.