தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் திரையுலகின் பல பிரபலங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவின் மெழுகுச்சிலையும் அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
அனுஷ்கா சர்மாவின் இந்த மெழுகுச்சிலை அவர் செல்பி எடுப்பது போன்று அமைந்திருப்பது பலரையும் கவர்ந்து வருகிறது. அதனால் அந்த சிலையுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அனுஷ்கா சர்மாவே, தன் சிலையை பார்த்து வியந்து போனார்.
அனுஷ்கா சர்மா நடிப்பில் அடுத்தப்படியாக ஜீரோ படம் வெளியாக உள்ளது. இதில் ஷாரூக்கான் ஹீரோவாக, குள்ள மனிதராக நடித்திருக்கிறார்.