தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குறுகிய காலத்திலேயே தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு தனியிடத்தை பிடித்தவர் தெலுங்கு இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா. அனைவரிடமும் வயது வித்தியாசம் பார்க்காமல் கலகலப்பாக பழகும் இவரது சுபாவமே இவர் நடித்து சமீபத்தில் வெளியான டாக்ஸிவாலா படக்குழுவினரை சங்கடப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
'டாக்ஸிவாலா' படம் ஹிட்டானதை தொடர்ந்து உடனடியாக சக்சஸ் மீட் நடத்தினார்கள் அதன் படக்குழுவினர். இந்த நிகழ்வில் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் கலந்து கொண்டார். அனைவரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது விஜய் தேவரகொண்டா தனது அருகில் நின்ற அல்லு அரவிந்த்தின் தோள்மீது கையை போட்டபடி போஸ் கொடுத்தார்.
அவ்வளவு பெரிய சீனியர், அவரது வயதுக்கான மரியாதை கூட தராமல் விஜய் தேவரகொண்டா இப்படி அவர் தோள்மீது கை போடலாமா என படக்குழுவினர் அப்செட் ஆனார்களாம். இதுகுறித்து சிலர் வெளிப்படையாகவே விஜய் தேவரகொண்டாவிடம் கூறவும் செய்தார்களாம். ஆனால் அவரோ, “அல்லு அரவிந்த் சார் எனக்கு தந்தை போன்றவர். அந்த பாசத்தின் உரிமையில் தான் நான் அவர் தோளில் கை போட்டேன். இது ஏதேச்சையாக நடந்த ஒன்று” என அவர்களை சமாதானப்படுத்தினாராம்.