‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
எம்.ஆர்.பாரதி இயக்கும் படம் அழியாத கோலங்கள் 2. பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:
பாலுமகேந்திராவின் நினைவை போற்றும் வகையில் தான் இந்தப் படத்திற்கு அழிகாத கோலங்கள் 2 என்று பெயர் வைத்திருக்கிறோம். மற்றபடி அவர் இயக்கிய அழியாத கோலங்கள் படத்தின் கதைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இது ஒரு வங்காள படத்தின் முறையான ரீமேக்.
சாகித்ய அகடாமி பெற்ற ஒரு எழுத்தாளினின் கதை. விருதை பெற்ற கையோடு தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் பழைய காதலியை சந்திக்க செல்கிறார் எழுத்தாளர். அந்த ஒரு இரவில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. வங்கமொழியில் பல விருதுகளை பெற்ற படம்.
இதில் எழுத்தாளராக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரேவதியும், காதலியாக அர்ச்சனாவும் நடித்திருக்கிறார்கள். நாசர் போலீஸ் அதிகாரியாகவும், ஈஸ்வரிராவ் செய்தி வாசிப்பாளராகவும் நடித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது. என்றார்.