தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. திரையுலகினர் பலரும் ஒவ்வொருவராக உதவிகளை அளித்து வருகின்றனர். நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றம் மூலம் உதவி மேற்கொள்ள அவர்களின் வங்கி கணக்கில் நிதியுதவி அளித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளார். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : "ரஜினிகாந்த் தன்னுடைய சார்பில் ரூபாய்.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக நேரடியாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.