டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் அதிகமாக இடம் பெறுவது குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்களும் அடிக்கடி அவர்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். பாமக கட்சியின் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு அவர்களது கடும் எதிர்ப்புகளை அடிக்கடி தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் 'சர்கார்' படத்தின் முதல் பார்வையில் கூட விஜய் புகைபிடிக்கும் காட்சி போஸ்டராக வெளிவந்தது. பலரது எதிர்ப்புகளுக்குப் பிறகு அதை நீக்கினார்கள். திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறக் கூடாது என சமீபத்தில் நடிகர் சங்கத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
விஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது. அதில் அரசாங்க போலீஸ் வண்டியில் அமர்ந்து கொண்டு விஷால் பீர் பாட்டிலை கையில் வைத்திருப்பது போன்ற போஸ்டர் வெளியானது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். “அயோக்யா' திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு.
பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!” என கண்டித்துள்ளார்.