பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாரம்பரிய நெல் ரகங்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட திருத்துரைப்பூண்டியைச் சேர்ந்த விவசாயி நெல் ஜெயராமனுக்கு புற்று நோய் என்றதும், சிகிச்சைக்காக பலரும் உதவி செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனின் சிகிச்சைக்காக, அரசு சார்பில், ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருக்க, ஏற்கனவே, அவரது மருத்துவச் செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என அறிவித்து, அதை செய்து வரும் சிவகார்த்திகேயனை சந்திக்க விரும்பினார் நெல் ஜெயராமன்.
இதையடுத்து, அவருக்கு தகவல் போக, நெல் ஜெயராமனை மருத்துவமனைக்கு வந்து சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது, நெல் ஜெயராமனின் காலை தொட்டு வணங்கிய அவர், 'நான் உங்க புள்ள மாதிரி; நீங்க என்ன கேட்டாலும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்ல, நெகிழ்ந்து போன ஜெயராமன், சிவ கார்த்திகேயனை கையெடுத்து கும்பிட்டு, நன்றி சொல்லி இருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்து புறப்படும் முன், நெல் ஜெயராமனின் உறவுக்காரர்கள் சிலரை அழைத்த சிவ கார்த்திகேயன், 'ஜெயராமனுக்கு ஆறாவது படிக்கும் பையன் இருப்பது அறிந்தேன். அந்தப் பையனின் முழு படிப்பு செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த பையன் என்ன படித்தாலும், செலவை நான் செய்கிறேன். இதை ஜெயராமனிடம் சொல்லுங்கள். சந்தோசமடைவார்; நோயில் இருந்து விரைந்து மீண்டு வருவார்' என சொல்லிச் சென்றிருக்கிறார்.
சிவ கார்த்திகேயனின், மனதை அறிந்து, நெல் ஜெயராமன் குடும்பத்தினர் நெகிழ்ந்து போயிருக்கின்றனர்.
சிவகார்த்திகேயனை போன்று நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ் போன்றவர்களும் நெல் ஜெயராமனை சந்தித்து உதவி உள்ளனர்.