Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமைதிக்கு காரணம் இதுதான் : சின்மயி விளக்கம்

20 நவ, 2018 - 11:01 IST
எழுத்தின் அளவு:
Chinmayi-breaks-the-silence

உலகளாவிய 'மீ டூ' இயக்கத்தின் மூலம், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிருந்தார், பிரபல பாடகி சின்மயி. பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பாலியல் தொந்தரவு நடந்ததாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, 'இத்தனை ஆண்டுகாலம் கழித்து, இதைச் சொல்வது ஏன்?' என, பலரும் சின்மயிடம் கேள்வி எழுப்பி, அவரை, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அவரை, டப்பிங் யூனியன் சங்கத்தில் இருந்து நீக்கி விட்டதாக, சின்மயி தெரிவித்திருந்தார்.

தன்னை நீக்கியதற்கான காரணமாக தமிழ்நாடு டப்பிங் யூனியனைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருப்பது பற்றியும் சொல்லி இருந்தார் சின்மயி. 'இரு ஆண்டுகளுக்கு சந்தா கட்டணை செலுத்தவில்லை' என டப்பிங் யூனியனைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருந்ததாகவும் கூறியிருந்தார் சின்மயி. அதோடு, 'சந்தா தொகையாக ஐந்து லட்ச ரூபாயை கேட்பதாகவும், ஆளாளுக்கு ஒரு தொகையை உறுப்பினர் கட்டணமாக வசூலிக்கின்றனர்' எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த டப்பிங் யூனியனின் இணை செயலர் ராஜேந்திரன், 'இரு ஆண்டுகாலம் யூனியனுக்கு உறுப்பினர் கட்டணத்தை சின்மயி செலுத்தாமல் இருந்ததோடு, யூனியனில் 15க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரிக்கப்படாமல் இருக்கிறது என்று, யூனியன் நடவடிக்கைகள் குறித்து, கடுமையாக விமர்சித்திருந்தார். அப்படி சொல்லியது ஏன் என்று கேட்டு, விளக்கம் அளிக்க சின்மயிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அதன்பின் தான் பொதுக்குழுவைக் கூட்டி, அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்' என கூறியிருக்கிறார்.

இதற்கு பின், டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார் சின்மயி. அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒரு பெண் வெளியுலகிற்கு வந்து பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பேசினால், இப்படித்தான் ஆகும் என தெரிந்துதான், அமைதியாக இருந்தேன். இத்தனை ஆண்டுகாலம் ஏன் தாமதித்தீர்கள் என்று என்னைப் பார்த்து கேட்கும் ஆண்கள், இதன் பிறகாவது, என்னுடைய தாமதத்துக்கான காரணத்தை புரிந்து கொள்வர் என நம்புகிறேன்.

இவ்வாறு சின்மயி கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in