பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி, சில நாட்களுக்கு முன்னர் தம்பதிகளாக மாறினர். இவர்களது, திருமணம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் மிக பிரம்மாண்டமாய் நடந்தது. கொங்கனி மற்றும் பஞ்சாபி முறைப்படி திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த இருநாட்களுக்கு பிறகே மணமக்களின் போட்டோ வெளியாகின. அந்தளவுக்கு யாரும் போட்டா எடுக்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்போடு திருமணம் நடந்தது.
இந்நிலையில் தீபிகா, ரன்வீர் திருமணம் முடிந்து இந்தியா திரும்பி உள்ளனர். விமான நிலையத்தில் இவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்தப்படியாக திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. பெங்களூருவில் ஒரு வரவேற்பும், மும்பையில் ஒரு வரவேற்பும் நடைபெற இருக்கின்றன.