'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கஜா புயல் தமிழகத்தை தாக்கி சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. குறிப்பாக கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களும் கடும் சேதத்தை சந்தித்தன. இவற்றை மீட்டெடுக்க தமிழக அரசு போராடி வருகிறது.
கேரள புயலுக்கு நிதியுதவி அளித்த நடிகர்களின் பட்டியலையும், அவர்கள் அளித்த தொகையையும் குறிப்பிட்டு, அவர்கள் தமிழ்நாட்டைப் பாதித்த புயலுக்கு நிதியுதவி அளிக்காமல் அமைதி காப்பதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பலர் கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படுவதாக சூர்யா அறிவித்துள்ளார். அவர்கள் நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் சார்பில் இந்த தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலுக்கு திரைநட்சத்திரங்கள் சார்பில் முதல் ஆளாக சிவகுமார் குடும்பத்தினர் நிதியுதவி அளித்துள்ளனர். இதையடுத்து மேலும் பலர் நிதியுதவி அளிப்பார்கள் என தெரிகிறது.