'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயற்கைப் பேரிழவு நடக்கும் போதெல்லாம் உடனடியாக நிதியுதவி அளித்து தங்களது கொடைத் திறமையை சில பல நட்சத்திரங்கள் காட்டிக் கொள்வார்கள். சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் புயல் பாதிப்பு நடந்த போது கூட போட்டி போட்டு லட்சங்களைக் கொடுத்து உதவினார்கள். நேரடியாக கேரள முதல்வரைச் சந்தித்து சில நடிகர்கள் நிதியுதவி அளித்தனர்.
ஆனால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்கள் 'கஜா' புயலால் பேரழிவைச் சந்தித்துள்ளன. அதற்கு இதுவரை எந்த ஒரு நடிகரும் நிதியுதவி என இத்தனை நாட்களாக அறிவிக்காதது சமூக வலைத்தளங்களில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சற்று முன்னர் நடிகர் சூர்யா குடும்பத்தார் சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள புயலுக்கு நிதியுதவி அளித்த நடிகர்களின் பட்டியலையும், அவர்கள் அளித்த தொகையையும் குறிப்பிட்டு, அவர்கள் தமிழ்நாட்டைப் பாதித்த புயலுக்கு நிதியுதவி அளிக்காமல் அமைதி காப்பதை கிண்டலுடன் விமர்சித்து வருகின்றனர்.
இதில் வேறு விஜய் கேரளா புயலுக்கு 75 லட்ச ரூபாய் அளித்தார் என விஜய் ரசிகர்கள் சண்டைக்கு வருகிறார்கள். அதிகாரப்பூர்வமாக விஜய் என்ன உதவி செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
தமிழ்நாட்டில் அரசியலுக்கு வரத் துடிக்கும் ஒரு சில நடிகர்கள் கூட உதவி செய்யுங்கள் என குரல் எழுப்பியதோடு சரி. சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் டிவி நடிகர்கள், நடிகைகள் கூட களத்தில் இறங்கி அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறார்கள். ஆனால், கோடிகளில் வாங்கும் நடிகர்கள் களமிறங்குவதற்கு ஏன் இவ்வளவு தயக்கப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் அதிகமாகவே பதிவாகி வருகின்றன.