'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் கமல்ஹாசனின் இளையமகள் அக்சரா ஹாசன், விவேகம் படம் மூலம் தமிழில் நடிகையாக களமிறங்கினார். தற்போது, ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை அக்சராவின் தனிப்பட்ட படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இதுதொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் அக்சரா. அந்த படங்கள் ஒரு படப்பிடிப்பின் போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டவை என்றும் அவற்றை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அக்சராவின் முன்னாள் காதலரும், மாஜி நடிகை ரதியின் மகனுமான தனுஜ் விர்வானி மீது சந்தேகம் எழுந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அக்சரா, தனுஜ் விர்வானிக்கு அந்தப்படங்களை அனுப்பியதாகவும், ஆகையால் அவர் வெளியிட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், தனுஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், அக்சரா எனக்கு அந்தப்படங்களை அனுப்பினார். ஆனால் அதை நான் அப்போதை அழித்துவிட்டேன், நான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.