இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'மெர்சல்' படத்தில் மேஜிக் நிபுணராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய். அவர் பங்கேற்ற ஒரு சண்டைக்காட்சியை வெளிநாட்டில் படமாக்கியிருந்தனர்.
மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் பங்கேற்ற சண்டைக்காட்சியில் ராமன் சர்மா என்பவர் பணிபுரிந்துள்ளார். அதில் வேலை பார்த்த தனக்கு இன்னும் தயாரிப்பு நிறுவனம் சம்பள பாக்கி வைத்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருப்பதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
வீடியோ வெளியிட்டது மட்டுமன்றி, தேனாண்டாள் பிலிம்ஸ் படநிறுவனத்தில் அதிபரான முரளி ராமசாமிக்கும் தனக்கும் நடந்த வாட்ஸ்-அப் கலந்துரையாடலின் ஸ்கிரீன் - ஷாட்டையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில் உள்ள தகவலின் அடிப்படையில் ராமன் சர்மாவுக்கு சம்பள பாக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.