'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் நடித்த 'வில்லு' படத்தில் இடம் பெற்றுள்ள 'டாடி மம்மி' என்ற ஆபாசமான பாடலை எழுதியவர் விவேகா. இவர் எழுதிய இந்தப்பாடல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்தவிழாவில் பேசும்போது, “திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகளைப் பரப்பினால் குழந்தைகள் நல்லவர்களாக வருவார்கள். திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர் நல்ல கருத்துகளைப் பரப்பினார். ஆனால், இப்போது 'டாடி மம்மி வீட்டில் இல்லை' எனப் பாடுகிறார்கள்” என்று கருத்து தெரிவித்தார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து டாடி மம்மி பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேகாவை கடுப்பாக்கிவிட்டது. உடனே தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் ஜெயகுமாருக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, “நான் இந்தப் பாடலை எழுதி 9 வருஷம் ஆகுது. இதோட 3 முறை அமைச்சர் ஜெயக்குமார் இப்பாடலை விமர்சித்துப் பேட்டி கொடுத்திருக்கார். ஒரு பாடலாசிரியராக ரசிகர்களின் உளவியல் அறிவேன். அமைச்சர் இப்பாடலின் மிகத்தீவிர ரசிகர்” என்று நக்கலடித்திருக்கிறார்.