'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் 16' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். அப்படத்திக் வெற்றியைத் தொடர்ந்து அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா இணைந்து நடித்துள்ள 'நரகாசூரன்' படத்தை இயக்கினார்.
கார்த்திக் நரேனுக்கு தெரியாமல் நரகாசூரன் படத்தின் ஏரியாக்களை விற்று அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கவுதம் மேனன் பணத்தை வாங்கியதால் தற்போது சிக்கலில் மாட்டிகொண்டுவிட்டது நரகாசூரன் படம். கவுதம்மேனன் செய்த குளறுபடியினால் நரகாசூரன்' படம் எப்போது வௌிவரும் என்றே தெரியவில்லை.
இதற்கிடையில் நாடகமேடை என்ற படத்தை ஆரம்பித்தார் கார்த்திக் நரேன். அந்தப்படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் வேறுவழியில்லாமல் அந்தப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டார். எடுத்த படமும் வெளிவராமல், புதிய படமும் எடுக்க முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்தாராம் கார்த்திக் நரேன்.
அவருடைய நிலையைக்கண்டு வருத்தப்பட்ட அரவிந்த்சாமி, கார்த்திக் நரேனை அழைத்து மீண்டும் கால்ஷீட் கொடுத்துள்ளார். மீண்டும் அரவிந்த்சாமி - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. தற்போது இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் கார்த்திக் நரேன்.