இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு சர்ச்சைகள் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் விஜய்யின் சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி உள்ள திமிரு புடிச்சவன் படமும் கதை திருட்டில் சிக்கி உள்ளது.
கிரைம் நாவல் மன்னன் என பெயரெடுத்த எழுத்தாளர் ராஜேஷ் குமார், திமிரு புடிச்சவன் பட கதை என்னுடையது என கூறியுள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது :
“கடந்தாண்டு, 'ஒன் + ஒன் = ஜீரோ' தொடர் கதையின் அடிப்படைக் கருவான, 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை ப்ரைன் வாஷ் செய்து, தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கின்றனர் என்பது பற்றி எழுதி இருந்தேன். அந்தக் கருவை அப்படியே காப்பியடித்து 'திமிரு புடிச்சவன்' திரைப்படத்தை எடுத்துள்ளனர். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜேஷ் குமார்.
இந்தப் பதிவுக்குக் கீழே, அவருக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.