'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்த் சமூகவலைதளமான டுவிட்டரிலும் இருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு, மே 5ம் தேதி டுவிட்டரில் இணைந்தார். ஆரம்பம் முதலே தன் சினிமா பற்றிய புரொமோஷன்களை தவிர்த்து வதந்தவர், அவ்வப்போது சமூக பிரச்னைகள் தொடர்பான கருத்துக்களை தெரிவித்தார்.
அரசியலில் களம் இறங்க போகிறேன் என்று அறிவித்த பின்னர் தன் மக்கள் மன்றம் தொடர்பாகவும், சமூக பிரச்னைகள் தொடர்பான விஷயங்களுக்கும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், டுவிட்டரில் அவரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியிருக்கிறது.
இதனிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினி. டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்" என பதிவிட்டிருக்கிறார்.