டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளதில் பெரிய ஆச்சரியம் இல்லை. “தெறி, மெர்சல்” ஆகிய படங்களுக்குப் பிறகு இப்போது திரும்பவும் இணைந்துள்ளார்கள். முந்தைய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் என்பதால் சிவா, அஜித் கூட்டணியைக் கிண்டலடித்த மாதிரி இந்த அட்லீ, விஜய் கூட்டணியை யாரும் கிண்டலடிக்கவில்லை.
இருந்தாலும் அட்லீயின் கதையைப் பற்றித்தான் கிண்டலடிப்பார்கள். 'ராஜா ராணி' படத்தை 'மெளன ராகங்கள்' படத்தின் காப்பியாகவும், 'தெறி' படத்தை 'சத்ரியன்' படத்தின் காப்பியாகவும், 'மெர்சல்' படத்தை 'அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம்' காப்பியாகவும் அட்லீ உருவாக்கியிருந்தார் என்று பலமான விமர்சனம் எழுந்தது.
இப்போது விஜய்யுடன் மூன்றாவது முறையாக அவர்கள் இணைந்துள்ள படத்திற்கு 'ஆளப் போறான் தமிழன்' என்ற தலைப்பு வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேசமயம், இந்தக் கதையாவது அட்லீ சொந்தமாக எழுதியுள்ள கதையா அல்லது முந்தைய தமிழ்ப் படங்களின் காப்பியா என சமூக வலைத்தளங்களில் இப்போதே கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.