கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
இயக்குனர் அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளதில் பெரிய ஆச்சரியம் இல்லை. “தெறி, மெர்சல்” ஆகிய படங்களுக்குப் பிறகு இப்போது திரும்பவும் இணைந்துள்ளார்கள். முந்தைய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் என்பதால் சிவா, அஜித் கூட்டணியைக் கிண்டலடித்த மாதிரி இந்த அட்லீ, விஜய் கூட்டணியை யாரும் கிண்டலடிக்கவில்லை.
இருந்தாலும் அட்லீயின் கதையைப் பற்றித்தான் கிண்டலடிப்பார்கள். 'ராஜா ராணி' படத்தை 'மெளன ராகங்கள்' படத்தின் காப்பியாகவும், 'தெறி' படத்தை 'சத்ரியன்' படத்தின் காப்பியாகவும், 'மெர்சல்' படத்தை 'அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம்' காப்பியாகவும் அட்லீ உருவாக்கியிருந்தார் என்று பலமான விமர்சனம் எழுந்தது.
இப்போது விஜய்யுடன் மூன்றாவது முறையாக அவர்கள் இணைந்துள்ள படத்திற்கு 'ஆளப் போறான் தமிழன்' என்ற தலைப்பு வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேசமயம், இந்தக் கதையாவது அட்லீ சொந்தமாக எழுதியுள்ள கதையா அல்லது முந்தைய தமிழ்ப் படங்களின் காப்பியா என சமூக வலைத்தளங்களில் இப்போதே கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.