இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் படங்களில் தந்தை கேரக்டர் என்றால் அலோக்நாத் தான். நம்ம ஊர் நாசர், ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ் மாதிரி நல்ல இமேஜ் உள்ள குணசித்தர நடிகர். இவர் மீது பிரபல ஹிந்தி பெண் இயக்குனர் விண்டா நந்தா பாலியல் புகார் கூறினார்.
விண்டா நந்தா தயாரித்த டி.வி தொடரின் நாயகியை அலோக்நாத் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் பகீர் புகார் தெரிவித்தார். இவர் தவிர பெயர் குறிப்பிடாத மேலும் இரு நடிகைகள் அலோக்நாத் மீது புகார் கூறினார்கள். இந்த புகார்களை மறுத்த அலோக்நாத், விண்டா நந்தா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக விசாரிக்க பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கம் அலோக்நாத்தை அழைத்தது. அந்த அழைப்பை அலோக்நாத் நிராகரித்து விட்டார். "நீதிமன்றத்தின் முன்தான் விளக்கம் அளிப்பேன். மற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை" என்று அவர் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருப்பதாலும், சங்கத்தின் விதிகளை மீறியதாலும் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி விட்டது நடிகர் சங்கம்.