தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டரில் சுறுசுறுப்பாக இயங்குபவர். டுவிட்டரில் அவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடருகிறார்கள். இதனால் டுவிட்டர் நிறுவனத்தின் கன்னியமான உபயோகிப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். இந்த நிலையில் இந்தியா வந்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே, ஏ.ஆர்.ரஹ்மானை சந்திதித்து பேசினார்.
இந்தியாவில் டுவிட்டரின் பயன்பாடு அது எந்த அளவிற்கு பொதுமக்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, மாணவர்களுக்கு, கலைஞர்களுக்கு பயன்படுகிறது. அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து இங்குள்ள பிரகமுகர்களிடம் கருத்து கேட்கவே வந்திருக்கிறார். கலைத்துறையில் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளார்.
ரஹ்மானுடனான அவரது சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளது. டுவிட்டர் நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் தங்களின் ஆலோசகர்களை நியமிக்க இருப்பதாகவும், இந்தியாவில் கலைத்துறையின் சார்பில் ஆலோசகராக பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஷாருக்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜேக் டோர்சே, தன்னை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் "ஜேக் டோர்சேவுடனான சந்திப்பு ஊக்கம் அளிப்பதாக உள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.