இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா. பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வில் உரிய மார்க் எடுக்க முடியாததால் மருத்துவம் படிக்க முடியாமல் போனது. அந்த கவலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அனிதாவின் கதையை ஆர்.ஜே.பிக்சர்ஸ் என்ற நிறுவனம், டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் படம் எடுக்கப்போவதாக அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கியது. அனிதாவாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி நடிக்கிறார் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது. அஜய் குமார் என்பவர் தயாரித்து, இயக்குவதாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில், அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு திரைப்படம் எடுக்கவோ, அது தொடர்பாக விளம்பரம் செய்யவோ தடை விதிக்க வேண்டும் என்று அனிதாவின் தந்தை டி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி பெறாமல் அறிவிப்புகளை வெளியிட்டதற்காக 25 லட்சம் இழப்பீடு கேட்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான அஜய் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வருகிற 22ந் தேதி தள்ளி வைத்தது.