அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி' வெளியாகி இருக்கும் நிலையில் ஜோதிகா அடுத்து நடிக்கும் புதிய படத்தை தொடங்கிவிட்டனர். 'சகுனி', 'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' 'NGK' ஆகிய படங்களை தயாரித்த 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் 21-வது தயாரிப்பாக உருவாக இருக்கும் படம் இது.
அறிமுக இயக்குனர் S.ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'காற்றின் மொழி' வரிசையில் இந்தப்படமும் கதாநாயகி ஜோதிகாவை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாம். இந்தப் படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
ஷான் ரோல்டன் இசை அமைக்கும் இந்த படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். இந்தப்படத்தில் நடிப்பதற்கு ஜோதிகாவுக்கு 1.5 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காற்றின் மொழி படத்தில் நடிப்பதற்கு ஜோதிகாவுக்கு 1.25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இப்படத்திற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் 'ஸ்கூல்' செட் ஒன்றை சென்னையில் அமைத்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த செட்டில் பல நாட்கள் நடைபெறவிருக்கிறது. படத்தில் ஜோதிகா டீச்சராக நடிக்கிறார்.