பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'திகில் படங்கள் என்றாலே, ரசிகர்களை பயப்பட வைக்கும் விதமான காட்சிகள் தான், தமிழ் படங்களில் காட்டப்படுகின்றன. ஆனால், நாங்கள் எடுக்கும் திகில் படத்தில், அப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் இடம்பெறாது' என்கிறது, கண்ணாடி படக்குழு.
மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில், ஹீரோவாக நடித்த சந்தீப் கிஷன் தான், இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில், ரசிகர்களை நடுங்க வைக்கும் விதமான, எந்த ஒரு காட்சிகளும் இருக்காதாம். அப்படியானால், 'இதை எப்படி திகில் படம் என கூறுவது' என, கேட்டால், 'இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும். ஏற்கனவே வெளியான திகில் படங்களில் இருந்து, முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும்' என, சஸ்பென்சுடன் கூறுகின்றனர், படக்குழுவினர்.