கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டின் காதல் ஜோடிகளான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே திருமணம் இத்தாலி நாட்டில் உள்ள லேக் கோமோ என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் செல்போன் எடுத்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதனால், ரன்வீர், தீபிகா ஆகியோரின் எந்த ஒரு திருமணப் புகைப்படமும் இணையங்களில் கூட வெளியாகவில்லை.
பாலிவுட்டின் பிரபலங்களை விரட்டி விரட்டி புகைப்படம் எடுக்கும் 'பப்பராசி' புகைப்படக் கலைஞர்களுக்கு அந்தத் திருமணம் பெரும் சவாலாகவே இருந்தது. அங்குள்ள புகைப்படக் கலைஞர்கள் கூட அந்தத் திருமணத்தை எடுக்க முடியவில்லை. எப்படியாவது அவர்களது திருமண புகைப்படத்தை வெளியிட வேண்டும் என பாலிவுட்டின் முன்னணி பத்திரிகைகளும் இணையதளங்களும் பெரும் முயற்சி செய்தன. ஆனால், அவர்களுக்கு அதில் தோல்வியே கிடைத்தது.
அதிகாரப்பூர்வ திருமண புகைப்படத்தை புது திருமணத் தம்பதியரே வெளியிட்டால்தான் உண்டு.