கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தன்னை வைத்து ஏற்கனவே படம் இயக்கிய இயக்குனர்களுக்கு மீண்டும் அவ்வப்போது வாய்ப்பு கொடுத்து வருகிறார் மம்முட்டி. அப்படிப்பட்ட ஒருவர் தான் இயக்குனர் ஜானி ஆண்டனி. சசிகுமாரை தான் இயக்கிய 'மாஸ்டர்ஸ்' படம் மூலம் மலையாளத்தில் நடிக்க வைத்தவர். இவரது இயக்கத்தில் ஏற்கனவே 'துருப்பு குலான்', 'பட்டணத்தில் பூதம், தப்பன்னா, தோப்பில் ஜோப்பன் என நான்கு படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி.
இதையடுத்து சமீபத்தில் மம்முட்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் ஜானி ஆண்டனி. அப்போது அவரிடம் தங்கள் கூட்டணியில் வெளியான 'பட்டணத்தில் பூதம்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் நன்றாக இருக்கும்.. எடுக்க முடியுமா என கேட்டுள்ளார். ஜானி ஆண்டனியும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு இரண்டாம் பாகத்திற்கான வேளையில் இறங்கியுள்ளார்.
2009ல் வெளியான பட்டணத்தில் பூதம் படம் குழந்தைகளை கவரும் விதமாக மந்திர தந்திர மாயாஜாலம் நிறைந்த படமாக வெளியானது. இதில் மம்முட்டி சர்க்கஸ் கலைஞர், பூதம் என இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார்.