நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
நடிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை மறுத்த அர்ஜூன், ஸ்ருதி ஹரிகரன் மீது 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அர்ஜூன் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஸ்ருதி ஹரிகரன் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருமே காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சினையை மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஆணையத்தின் முன் விசாரணைக்கு வரும்படி ஸ்ருதி ஹரிகரனுக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று மகளிர் ஆணையத்தின் முன் ஆஜரான ஸ்ருதி ஹரிகரன், அர்ஜூனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மகளிர் ஆணையத்திடம் என் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறியுள்ளேன். பாலியல் புகாருக்கு தேவையான வீடியோ, ஆடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். அதனால் அதனை வெளியிடவோ, அது பற்றி பேசவோ முடியாது. எனக்கு தகுந்த நீதி கிடைக்கும். என்றார். மகளிர் ஆணையம் விசாரணைக்கு வருமாறு அர்ஜூனுக்கும் சம்மன் அனுப்பி உள்ளது.