தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நேற்று உலக குழந்தைகள் தினம். இதையொட்டி கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்கள் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அவர்களுடன் சகஜமாக தரையில் அமர்ந்து உரையாடினார். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
குழந்தைகள் கமலின் பிறந்தநாளுக்காக தயார் செய்து வைத்திருந்த பாடலை பாடினார்கள். ஷக்தி என்ற ஒரு பார்வையற்ற மாணவி எங்களுக்கு பிரைலி கீ போர்ட் கொண்ட கம்ப்யூட்டரும், பிரிண்டரும் வாங்கித் தருமாறு கமலிடம் கேட்டார். அதை உடனே வாங்கித் தருவதாக கமலும் உறுதி அளித்தார்.
பின்னர் அவர் அந்த குழந்தைகளிடையே பேசியதாவது: நானும் இந்த பள்ளியின் மாணவன் தான். உங்களில் ஒருவன் தான் எப்படி என்று கேட்கிறீர்களா? 32 வருடங்களுக்கு முன்பு நான் ராஜபார்வை என்ற படத்தில் பார்வையற்றவனாக நடித்தேன். அப்படி நடிப்பதற்கு இங்கு வந்து பிரைய்லி மொழியையும், சைகை பாசையையும் கற்றுக் கொண்டேன். நீங்கள் வாழ்த்தியது எனக்கு என் பாதையில் வேகமாக செல்லத் தூண்டியிருக்கிறது.