பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினமாவில் இரண்டாவது ஆட்டத்தை தொடங்கி உள்ள நடிகை ஜோதிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் நவ., 16-ல் காற்றின் மொழி ரிலீஸாகிறது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தனது அடுத்தப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, ராஜ் என்கிற புதியவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று(நவ., 14) பூஜையுடன் ஆரம்பமானது. ஜோதிகா, சிவகுமார், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜோதிகா, பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். டீச்சர் வேடம் ஜோதிகாவிற்கு புதிதல்ல, ஏற்கனவே சூர்யாவின் காக்க காக்க படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்தப்படத்தை விட இந்தப்படத்தில் இவரது கேரக்டர் வலுவானதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.