பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகத்தின் உச்ச நட்சத்திரத்தின் இரண்டாவது மகளுக்கும், பெரும் தொழிலதிபர் மற்றும் வளரும் நடிகர் ஒருவருக்கும் இடையிலான மறுமணம் பற்றித்தான் நேற்று பல ஊடகங்களில் செய்தி. ஆனால், அது அதிகாரப்பூர்வ செய்தி அல்ல. இதுவரையில் உச்ச நட்சத்திரம் தரப்பிலிருந்தும் அதற்கு மறுப்பு வராததால் அந்த மறுமணம் பற்றிய செய்திகள் உண்மையாகத்தான் இருக்கும்.
இந்த மறுமணத்தின் பின்னணியில் ஒரு கலவரமான உண்மைகள் இருக்கிறது. உச்ச நட்சத்திரத்தின் மகள் விவாகரத்து பெற்றவர். அவரைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நடிகரும் விவகாரத்து வாங்கியவர். அவருடைய முன்னாள் மனைவி, முன்னாள் பத்திரிகை அதிபர் ஒருவரின் பேத்தியாம். அந்த பேத்தி, தற்போது வேறு ஒரு இளம் தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டுள்ளாராம். அந்த இளம் தொழிலதிபருக்கும், மூன்றெழுத்து நடிகைக்கும் திருமணம் நடக்க இருந்து நிச்சயதார்த்தம் வரை சென்று, பின்னர் ரத்தானது.
உச்சநட்சத்திரத்தின் மகளின் முன்னாள் கணவர் ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவிட்டது கூடுதல் தகவல்.
பெரிய இடத்தில் காதலும், விவாகரத்தும், மறுமணமும் சர்வசாதாரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம். இது பற்றித்தான் இப்போது ஹாட்டாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்களாம்.