இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியை வைத்து படங்களை தயாரித்து வருகிறார் அவரது மனைவி பாத்திமா. அவர், தீபாவளிக்கு வெளியிடும் நோக்கத்தோடு, விஜய் ஆண்டனியை வைத்து 'திமிரு பிடிச்சவன்' என்ற படத்தை தயாரித்திருந்தார்.
ஆனால், எதிர்பார்த்தப்படி படத்தை அவரால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. காரணம் - 'சர்க்கார்' படம். இது குறித்து, பாத்திமா கோபத்துடன் 'டுவீட்' செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தீபாவளி நாளில் தான், திமிரு பிடிச்சவன் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருந்தோம். ஆனால், தமிழகம் முழுவதும் 800 தியேட்டர்களில், 'சர்க்கார்' படம் ஆக்கிரமித்துக் கொண்டது. நாங்கள், தீபாவளி அன்று படத்தை வெளியிடப் போகிறோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்லி, அனுமதியும் பெற்றிருந்தோம். ஆனால், சர்க்கார் பட ஆக்கிரமிப்பால், அது முடியாமல் போய் விட்டது என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, திமிரு பிடிச்சவன் படம் நவ., 16-ம் தேதி வலுக்கட்டாயமாக ரிலீஸாகிறது.