வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அன்பானவன் அசராவதன் அடங்காதவன் படம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கும், அப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கிறது. இடையில் அமைதியாக இருந்த இந்த பிரச்னை இப்போது மீண்டும் கிளம்பி உள்ளது.
'ஏ.ஏ.ஏ, படத்தைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று கேட்டு, நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தேன். அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை கொடுக்கும் வரையில், வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது. ஆனால், அவர் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்ததோடு, அவரை வைத்து இயக்குநர் சுந்தர் சி புதுப்படம் எடுக்கிறார். அதனால், இதையெல்லாம் வலியுறுத்தி மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்' என, புதிய பிரச்னையை கிளப்பி இருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
இந்த பிரச்னை தொடர்பாக, ஓரிரு நாளில் தயாரிப்பாளர் சங்கம் கூடி விவாதிக்க இருக்கிறது. இதனால் சிம்பு மற்றும் அவர் நடிக்கும் படங்களுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.