சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சமீபத்தில் வெளியான சண்டக்கோழி-2 படத்தை தொடர்ந்து அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் விஷால்.
இந்த படம் தெரு நாய்கள் பற்றிய படம். விஷால் இயக்குநராக அறிமுகமாக உள்ள படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். த்ரிஷா நடித்த 96 படம் தற்போது வணிகரீதியில் வெற்றியடைந்ததால் அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
விஷால், த்ரிஷா ஆகிய இருவருமே நாய் போன்ற பிராணிகள் மீது பரிவு கொண்டவர்கள். பிராணிகளுக்காக இவர்கள் இருவரும் அடிக்கடி குரல் கொடுப்பவர்கள். பீட்டா அமைப்பில் தற்போது வரை உறுப்பினராக இருக்கிறார் த்ரிஷா. விஷாலோ சில வருடங்களுக்கு முன்பு வரை பீட்டாவில் ஆதரவாளராக இருந்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு பீட்டா அமைப்பு மீது தமிழக மக்களின் கோபம் திரும்பியதும், மெல்ல அதிலிருந்து கழன்று கொண்டுவிட்டார் விஷால். இப்போது த்ரிஷா உடன் இணைந்து படம் பண்ணுகிறார். ஏற்கெனவே சமர் படத்தில் விஷாலும், த்ரிஷாவும் இணைந்து நடித்துள்ளனர். சமர் படம் கமர்ஷியலாக தோல்வியடைந்த நிலையில் இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைகின்றனர்.