இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வார். அவர், தற்போது 'கவச்சம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காஜல் அகர்வால் பேசும் போது படக்குழுவினர் ஒவ்வொருவரைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேச வந்தார். ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு பற்றி பேசும் போது, மேடையில் அமர்ந்திருந்த சோட்டா, நேரடியாக காஜல் பேசும் இடத்திற்குச் சென்றார். அவரை மேடையில் கட்டிப் பிடித்து பாராட்டினார் காஜல். அப்போது சோட்டா திடீரென காஜலின் கன்னத்தில் முத்தமிட்டார். அது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
அதன்பின் அவர் மேடையில் அமர்ந்திருந்தவர்களிடம் ஏதோ பேசினார். அவர் தங்களது குடும்பத்தில் ஒருவர் போன்றவர் என காஜல் சொன்னார்.
சோட்டா கே நாயுடு, பல பெரிய தெலுங்குப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். ரஜினிகாந்த் நடித்த 'பாபா' படத்திற்கும் அவர் தான் ஒளிப்பதிவு செய்தார்.