டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'நடிகர் விஜய்யுடன் இரு படங்களில் இணைந்து நடித்து விட்டேன்; அடுத்ததாக, நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டும். அதுதான் என்னுடைய இப்போதைய விருப்பம்' என, நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது : சாவித்திரி கேரக்டரில் நான் சிறப்பாக நடித்ததால், அதே போன்றதொரு கேரக்டரில் மீண்டும் நடிப்பீர்களா என்றே பலரும் கேட்கின்றனர். அப்படி கேட்பது எனக்கு பிடிக்கவில்லை. ஒரே மாதிரியான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று எப்படித்தான் கேட்கிறார்களோ? ஆனாலும், சாவித்திரி கேரக்டரில் நான் நடித்தது எனக்கு நல்ல அனுபவத்தையும்; மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சாவித்திரி கேரக்டரில் நான் நடித்தது மேஜிக்.
முழுக்க முழுக்க கதையம்சம் உள்ள படங்களில் படங்களில் மட்டுமே நடிக்க முடியாது. கமர்சியல் படங்களிலும் நடிக்க வேண்டும். நடிக்க வந்ததில் இருந்து தொடர்ந்து நடித்து வருகிறேன். அதனால், சில மாதங்களாக ஓய்வில் இருக்கிறேன். வயலின் கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது வரை இருபது படங்களுக்கான கதைகளை கேட்டுள்ளேன். விரைவில் புத்துணர்வோடு மீண்டும் வேகம் எடுப்பேன். தமிழில் நடிகர்கள் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து விட்டேன்; நடிகர் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.