பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த 'சர்கார்' படம் வெளியீட்டிற்கு முன்பும், பின்பும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் 2 நாளில் 100 கோடியும், 4 நாளில் 150 கோடியும் வசூலித்ததாகச் சொன்னார்கள். இப்போது 6 நாட்களில் 200 கோடியைக் கடந்துவிட்டது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்ட 'சர்கார்' படம் அங்கும் வெற்றியைப் பெற்றுள்ளது. தெலுங்கில் விஜய் நடித்து டப்பிங் செய்யப்பட்ட படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை. அந்தக் குறையை 'சர்கார்' தெலுங்கு டப்பிங் தீர்த்து வைத்திருக்கிறது. நேரடியாக தெலுங்கில் வெளிவந்த 'சவ்யசாச்சி, அதுகோ' ஆகிய படங்களை விடவும், ஆமீர்கான் நடித்த 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' படத்தை விடவும் 'சர்கார்' வசூலை அதிகம் பெற்று கடந்த வார தெலுங்கு பாக்ஸ் ஆபிசில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
7.5 கோடிக்கு தெலுங்கில் விற்கப்பட்ட 'சர்கார்' படம் ஏற்கெனவே லாபத்தைத் தர ஆரம்பித்துவிட்டது. 'சர்கார்' வெற்றி விஜய்க்கு கேரளா, கர்நாடகாவை அடுத்து தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவிலும் புதிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.