தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தொடர்ச்சியாக நடித்து வந்தார். தமிழில், கடைசியாக சாருலதா என்ற படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்தார்.
கடந்தாண்டு, முஸ்தபா ராஜூ என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரியாமணி, திருமணத்திற்கு முன்பே நடித்து வந்த ஒரு மலையாள படத்தில் திருமணம் முடிந்த 2வது வாரத்திலேயே கலந்து கொண்டு நடித்தார்.
அதையடுத்து புதிய படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பிரியாமணி, தற்போது தெலுங்கில் ஒரு திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை பிரகாஷ் புலிஜெலா என்ற புதுமுகம் இயக்குகிறார்.