பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகை, சமூக ஆர்வலர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகை பார்வதி. அவர் படங்களில் நடிப்பதை விட, நடிகைகள் மற்றும் பொதுவெளியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கும் நேரமே அதிகம். இந்தநிலையில் அவருக்கு இயக்கத்தில் இறங்கும் ஆர்வமும் ஒரு பக்கம் இருக்கிறதாம்.
ஏற்கனவே பெங்களூர் டேய்ஸ் படத்தில் நடித்த பார்வதி, அந்தப்படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன், இயக்குவதை ஆர்வமுடன் கவனித்து வந்தாராம். மீண்டும் இந்த ஆண்டு அஞ்சலி மேனன், இயக்கத்தில் வெளியான கூடே படத்தில் நடிக்க அவர் அழைத்தபோது, அவரிடம் உதவி இயக்குனராக வேலை பார்க்கும் ஆசையையும் வெளிப்படுத்தினாராம். ஆனால் அஞ்சலி மேனனோ, நீ நடித்தால் மட்டும் போதும், டைரக்சன் ஆசையை எல்லாம் இப்போதைக்கு ஒதுக்கி வை என அட்வைஸ் கொடுத்தாராம்.