'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் பாகுபலி போன்று, தமிழில் 2.0 போன்று, மலையாளத்தில் காயங்குளம் கொச்சுண்ணி போன்று கன்னடத்தில் உருவாகி உள்ள பெரிய பட்ஜெட் படம் கே.ஜி.எப். 80 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள முதல் கன்னடப் படம். இது ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
இதனை ஹம்பிள் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிர்கந்தூர் தயாரித்துள்ளார். யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, வசிஸ்டா என்.சிம்கா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்சுர் இசை அமைத்துள்ளார், புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். பல விருகளை பெற்ற உகரம் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார். டிசம்பர் 21ந் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் விஷால் வாங்கி வெளியிடுகிறார். இதற்கான நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது.
விழாவில் விஷால் பேசியதாவது: கன்னட சினிமாவின் வியாபார எல்லை விரிவடைந்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் படம் தயாராக தொடங்கி உள்ளது. இது நல்ல மாற்றத்துக்கான அறிகுறி. இந்தப் படத்தை தமிழில் வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன். பாகுபலி உலக அளவில் சாதனை படைத்தது போன்று இந்தப் படமும் சானை படைக்கும் என்று நம்புகிறேன். என்றார்.