ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மீடூ விவகாரம் சினிமா உலகில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. காலா பட வில்லன் நானா படேகரில் தொடங்கிய இந்த விவகாரம், பின்னர் கோலிவுட்டில் வைரமுத்து-சின்மயி, அர்ஜூன்-ஸ்ருதி ஹரிஹரன் என்று பரபரப்பு தீயை பற்ற வைத்தது.
இந்நிலையில் சமீபத்தில் மீடியாக்களை சந்தித்த விஷால் மீடூ குறித்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், சினிமா உலகில் நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனது முதல் படம் தொடங்கி சண்டக்கோழி-2 வரை அனைத்து நடிகைகளுமே பாதுகாப்பாக பணி செய்தனர்.
அதோடு மீடூ என்பதை நடிகைகள், தங்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பவர்களை வெளிச்சம் போட்டு காண்பிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக, சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றியவர்களை பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்றார்.