இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வைதேகி வந்தாச்சு படத்தில் அறிமுகமாகி பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி, மாமியார் வீடு, சூரியன், சந்திரன் உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன், சில வருட இடைவெளிக்கு பிறகு பருத்திவீரன் படம் மூலம் ரீ எண்டரி ஆனார். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
சரவணின் சொந்த ஊர் சேலம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர் தனது சொந்த ஊருக்கு சென்று விடுவது வழக்கம். கடந்த ஒரு வாரமாக அவர் சேலம் சூரமங்கலத்தில் உள்ள பூர்வீக வீட்டில் தங்கியிருந்தார். கடந்த தீபாவளி தினத்தன்று சரவணனுக்கு திடீரென்று காய்ச்சல் வந்தது. உடனடியாக அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு பன்றி காய்ச்சல் வந்திருப்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து சேலம் மாநகராட்சி சுகாதார அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து செயல்பட்டு சரவணன் குடும்பத்தினருக்கும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து கொடுத்தனர். தற்போது சரவணன் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் உடல்நலம் தேறி வருகிறார்.