விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தயாரிப்பாளர் சங்க புதிய விதிகளின் படி ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையும், 3வது வெள்ளிக் கிழமையும் சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளிவரும் என்பதாகும். அதன்படி வருகிற 16ந் தேதி உதயா நடித்து, தயாரித்துள்ள உத்தரவு மகாராஜா, நகுல் நடித்துள்ள செய், ஜோதிகா நடித்துள்ள காற்றின்மொழி, மற்றும் சித்திரம் பேசுதடி 2ம் பாகம் ஆகிய படங்கள் வெளிவர தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவித்திருந்த விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிருபுடிச்சவன் படம் அன்று வெளிவரவில்லை. அதனால் வருகிற 16ந் தேதி வெளிவரும் என்று விஜய் ஆண்டனி விளம்பரம் செய்திருந்தார். இதனால் செய் மற்றும், உத்தரவு மகாராஜா படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் குறைக்கப்படுகிறது என்ற செய்திகள் வெளியானது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் "உத்தரவு மகாராஜா, செய், சித்திரம் பேசுதடி 2, காற்றின் மொழி படங்கள் வெளியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்கள்தவிர வேறு படங்களுக்கு சங்கம் அனுமதி வழங்கவில்லை. சிறிய படங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த தேதியில் அனுமதி பெறாத படங்கள் வந்து மேற்படி படங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது சங்கவிதிப்படி, உறுதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுககப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.