ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜ்பாபு இயக்கத்தில் நகுல், ஆஞ்சல் முஞ்சால், பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்க உருவாகி உள்ள படம் செய். இப்படம் வருகிற நவ., 16-ம் தேதி ரிலீஸாகிறது.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நகுல் பேசியதாவது : நவ., 16-ல் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தை அனுமதியின்றி ரிலீஸ் செய்வதால், எங்களது செய் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் உருவாகி உள்ளது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய தியேட்டர் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
இந்தச் சங்கம், விதிமுறை எல்லாம் எதற்கு?. இந்த தயாரிப்பாளர் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ்படம் தயாரிக்க வேண்டும் என்று வந்தார். இப்படியெல்லாம் சூழல் இருந்தால் தயாரிப்பாளர்கள் இனி எப்படி வருவார்கள். விஷால் எங்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்றார்.