‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'சர்கார்' படம் வெளியீட்டிற்கு முன்பாக கதை சர்ச்சையிலும், வெளியீட்டிற்குப் பின்பாக அரசியல் காட்சிகள் சர்ச்சையிலும் சிக்கியது. இந்தப்படம் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அதிகமான தியேட்டர்களில் வெளியானது.
தெலுங்கில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு இப்படத்தின் டப்பிங் உரிமை விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்தத் தொகையை நான்கு நாட்களிலேயே பெற்று 'சர்கார்' ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படத்திற்குப் போட்டியாக வெளியான தெலுங்கு படமான 'அதுகோ', ஹிந்திப் படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாதது 'சர்கார்' படத்தின் வசூலுக்கு வசதியாகப் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் வசூலாகும் தொகை அனைத்தும் 'சர்கார்' படத்தின் லாபக் கணக்கில் சேரும் என்கிறார்கள் டோலிவுட்டினர். ஆந்திரா, தெலுங்கானாவைப் போலவே கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் இந்தப் படம் வெற்றிகரமான படமாக அமைந்துவிட்டது. நான்கு நாட்களில் இப்படம் 150 கோடி வசூலைக் கொடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.