கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள சர்கார் படத்தில் அதிமுகவுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் தியேட்டர்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரச்னையை பெருசுபடுத்த விரும்பாத சர்கார் படக்குழு, அதிருப்திகரமான காட்சிகளை நீக்கியுள்ளது.
இருப்பினும், சர்கார் படத்துக்கு திரையுலகினர் ரஜினி, கமல் உள்பட பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள். அதுகுறித்து குஷ்புவும் தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
அது என்னவென்றால், "தமிழக அரசு மக்கள் மீது தனது அதிகாரத்தை திணிக்கிறது. கையை முறுக்குவது, மிரட்டுவது, பயத்தை உருவாக்குதெல்லாம் புதிதல்ல. இதையெல்லாம் பல விஜய் படங்கள் வெளியாகும்போது பார்த்து விட்டோம். அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தை ஏன் இவ்வளவு பாதுகாப்பற்றதாக மாற்றி விட்டார்கள்? பில்டிங் ஸ்டிராங் பேஸ்மென்ட் வீக் அதிமுக" என்று பதிவிட்டுள்ளார்.