தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி உள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தின் இயக்குநர் முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம், தேவராஜன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
இதனிடையே நேற்று இரவு முருகதாஸ் வீட்டு முன்பு ஏராளமான போலீசார் குவிந்தனர். அவர் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் பரவியது. போலீஸ் தரப்போ அவருக்கு பதுகாப்பு வழங்க வந்தோம் என்றனர்.
இந்நிலையில் சர்கார் பட விவகாரத்தால் தான் கைது செய்யப்படலாம் என கருதிய முருகதாஸ், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரண, 3 மணிக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், சர்கார் வெறும் சினிமா மட்டுமே என தெரிவித்தார். மேலும், நீங்கள் சொல்வது போன்று டிவி-யை எரித்தால் ஏற்றுக் கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார். தணிக்கை சான்று பெற்ற படத்தை எதிர்ப்பது சரியல்ல என கூறி, முருகதாஸை நவ., 27 வரை கைது செய்ய தடை விதித்து வழக்கை அன்றைய தேதிக்கு தள்ளி வைத்தார்.