ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம், தீபாவளிக்கு வெளியாகி உள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக அதிமுக.,வினர் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தியேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள சர்கார் பட பேனர்கள், போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. சில தியேட்டர்களின் முகப்பு கண்ணாடி சேதப்படுத்தப்பட்டுள்ளன. இன்றும் சில ஊர்களில் இது தொடர்கிறது.
இந்நிலையில் சர்ச்சை காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்திருக்கிறது. சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுக., அரசு தெரிவித்து வரும் எதிர்ப்புக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் ரஜினியும் டுவிட்டரில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரில் ரஜினி கூறியிருப்பதாவது : தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பதிவிட்டிருக்கிறார்.
விஷால்
விஷால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : இயக்குனர் முருகதாஸ் வீட்டில் போலீசா? எதற்காக? எதுவும் அசம்பாவிதம் நடக்காது என்று நம்புகிறேன். மீண்டும். சென்சார் படத்திற்கு ஒப்புதல் அளித்து மக்கள் பார்த்துள்ளனர். அப்படி இருக்க இந்த கூப்பாடு ஏன்?
ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ், டுவிட்டரில் கூறியிருப்பதாவது : தணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். எதற்காக சென்சார் உள்ளது.