ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மணிகண்டன் 28. தீபாவளிக்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான காவேரிப்பாக்கத்திற்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று சர்கார் படம் வெளியானதால் விஜய் ரசிகர்கள், அந்த பகுதிகளில் சர்கார் படத்தின் பேனர்களை வைத்துள்ளனர். இதில் அவர் வீடு அருகேயும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனர்களை மணிகண்டன் கிழித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
அதையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் அவரை விஜய் ரசிகர்களிடமிருந்து மீட்டு ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். சற்றுநேரத்தில் அந்த அறைக்குள் மணிகண்டன் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
இதையடுத்து அவரது உடம்பை கைப்பற்றிய போலீசார், மணிகண்டன் தானாக தூக்கில் தொங்கினாரா? இல்லை கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.