'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹீரோயின்கள் தங்களுக்கு முக்கியத்தும் உள்ள கதைகளில் நடிப்பது இப்போதைய டிரண்ட்டிங். இதனை அறம், மாயா படங்களில் நயன்தாரா தொடங்கி வைத்தார். தற்போது ஐரா படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா நாயகி, மோகினி படங்களில் நடித்தார். தற்போது ரங்கா படத்தில் நடித்து வருகிறார். அமலாபால் ஆடை படத்தில் நடிக்கிறார். லட்சுமிராய் சிண்ட்ரல்லா படத்தில் நடிக்கிறார், வரலட்சுமி ராஜபார்வை படத்தில் நடிக்கிறார். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் பூர்ணா.
மரண வீடியோ கேமான புளூவேல் விளையாட்டை மையமாக வைத்து அதே பெயரில் தயாராகும் படத்தில் பூர்ணா, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். புளூவேல் விளையாட்டை விளையாடும் சிறுவனாக மாஸ்டர் கபீஸ் கன்னா நடிக்கிறார். வி.சி.சிவன் இசை அமைக்கிறார், கேகே ஒளிப்பதிவு செய்கிறார். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது, 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி.அருமை சந்திரன் தயாரிக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ஜனவரி மாதம் வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் டி.ரங்கநாதன் கூறியதாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'புளு வேல்' என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் 'புளுவேல்' விளையாட்டு.
ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் 'புளு வேல்'. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். என்றார்.