வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
புத்தம் புது தொடர்களை பிரமாண்டமாக சினிமா தரத்தில் தந்து கொண்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் சேனல். அந்த வரிசையில் அடுத்து வருகிறது ஓவியா என்ற தொடர். இது சென்னை கடற்கரையை ஒட்டிய மீனவர்களின் வாழ்வியலை சொல்லப்போகிற யதார்த்த தொடர்.
சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மீனவர் குப்பத்தை சேர்ந்தவள் ஓவியா.
படிப்பில் அவள் ரொம்ப புத்திசாலி. அதனால் ஊருக்கே அவள் செல்லப்பிள்ளை. அவள் 12ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தேர்வாகிறாள். அரசு பள்ளியில் படித்து முதல் மாணவியாக தேர்வாவதால் நாடே அவரை கொண்டாடுகிறது. குப்பத்து மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை... அது ஏன் என்பதுதான் தொடரின் திரைக்கதை.
வருகிற 26ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. இன்றைய கல்வி முறையை சாடும் ஒரு அரசியல் கலந்த சமூக தொடராக ஓவியாக ஒளிபரப்பாக இருக்கிறது.